
சிங்களவன் கிரிக்கெட் அணியில் விளையாடி பல கோடி சொத்துகளுக்கு அதிபதியான இவன் தமிழனா ? சென்னையில் உள்ள பல கோடி மதிப்புள்ள மலர் மருத்துவமனை உரிமையாளரின் பெண்ணை திருமணம் செய்து மேலும் பல கோடிகளுக்கு அதிபதியான இவன் ஒரு முறையேனும் தமிழினப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தது உண்டா ?. போர் நடக்கும் போதும் சரி , போர் முடிந்த பின்பும் இவன் தமிழனுக்காக இரக்கப் பட்டது இல்லை.
இவன் இனத்தால் தமிழனாக இருந்தாலும் மனதளவில் சிங்களவனே . இலங்கையில் உள்ள கருணாவைப் போல் , டக்லஸ் போல் இவனும் ஒரு இனத் துரோகியே . இவனை தமிழன் என்று எண்ணி வடநாட்டு ஊடகங்கள் பேட்டி எடுக்கின்றன . அப்பேட்டியின் போது , இவன் சொல்கிறான் , தமிழர்கள் எல்லோரும் போர் முடிந்தவுடன் நலமாக இருக்கிறார்கள் என்று . இவன் தமிழர் பகுதிகளில் சென்று தமிழ் மக்களிடம் பேசி உள்ளானா ? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்துள்ளானா ? தமிழர்களுக்காக இவன் ஒரு முறையேனும் குரல் கொடுத்துள்ளானா ?
சிங்களக் கொடியை தூக்கிச் சுமக்கும் இவன் தமிழர் கொடியை பிடித்ததுண்டா ? என்றைக்காவது ஒரு நாள் இவன் தன்னை தமிழன் என்று அடையாளப் படுத்தியது உண்டா . சிங்களவனுக்கு வாழ் நாள் முழுவதும் உழைத்து பணம் சம்பாதித்த இவன் தமிழர்களுக்கு எப்படி ஆதரவாக பேசுவான் ? இவனை தமிழன் என்று இவனிடம் கருத்துக்களை கேட்கும் வட நாட்டு ஊடகங்கள் முதலில் இவன் தமிழனே அல்ல என்பதை புரிந்து கொள்ளட்டும். இவனை புறக்கணிக்க வேண்டியது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்

